Type Here to Get Search Results !

வரலாற்றில் இன்று.... மே 31 இன்றைய தின நிகழ்வுகள்...!

  

மே 31 கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

455 - உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்.

1223 - செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது.

1293 - சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1] [2]

1669 - சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

1790 - ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது.

1859 - வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.

1889 - அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர்.

1902 - இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.

1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1911 - டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1911 - மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார்.

1921 - அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 கறுப்பினத்தவர் கொல்லப்பட்டனர்.

1935 - பாக்கித்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர்.

1941 - ஆங்கில-ஈராக்கியப் போர்: ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.

1942 - இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.

1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.

1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1970 - பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.

1973 - கெமர் ரூச் மீதான குண்டுத் தாக்குதல்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளைக் குறைக்க அமெரிக்க மேலவை வாக்களித்தது.

1973 - சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.

1981 - யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

1985 - வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர்.

1991 - அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது.

1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.

2004 - ஈழப்போர்: ஈழத்துப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005 - ஈழப்போர்: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2013 - சிறுகோள் "1998 கியூ.ஈ.2" அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு [[பூமி]க்கு மிகக் கிட்டவாக வந்தது.

2017 - காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1725 - அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795)

1819 - வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892)

1852 - ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (இ. 1921)

1912 - சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1997)

1912 - மார்ட்டின் சுவார்சுசைல்டு, செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் (இ. 1997)

1919 - எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1970)

1930 - கிளின்ட் ஈஸ்ட்வுட், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1931 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975)

1941 - வில்லியம் நோர்டவுசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1945 - லோரண்ட் பாக்போ, ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர்

1948 - சிவெத்லானா அலெக்சியேவிச், நோபல் பரிசு பெற்ற பெலருசிய எழுத்தாளர்

1966 - ரொசான் மகாநாம, இலங்கைத் துடுப்பாளர்

1976 - கோலின் பார்ரெல், ஐரிய நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1809 - ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732)

1832 - எவரிஸ்ட் கால்வா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1811)

1910 - எலிசபெத் பிளாக்வெல், ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. 1821)

1960 - டி. பி. ஜாயா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1890)

1964 - பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டிடக் கலைஞர் (பி. 1909)

1973 - மோகன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (பி. 1916)

1976 - ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரியலாளர் (பி. 1910)

1981 - பார்பரா வார்ட், ஆங்கிலேயப் பொருளியலாலர், ஊடகவியலாளர் (பி. 1914)

1987 - ஜான் ஆபிரகாம், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1937)

2000 - அ. ஜெ. வில்சன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1928)

2004 - ஐயாத்துரை நடேசன், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1954)

2007 - எசு. எம். கமால், தமிழக வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர் (பி. 1928)

2009 - கமலா தாஸ், மலையாள எழுத்தாளர் (பி. 1934)

இன்றைய தின சிறப்பு நாள்

உலக புகையிலை எதிர்ப்பு நாள்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.