Type Here to Get Search Results !

கமலஹாசரின் இந்த பேச்சில் சிறிதும் ஆச்சர்யமில்லை

கமலஹாசரின் இந்த பேச்சில் சிறிதும் ஆச்சர்யமில்லை..

அவர் கட்சிக்கு நிதியளிக்கும் இயக்கங்களுக்கு அவர் செலுத்தும் நன்றிக்கடன் அது...

"இன்ன இடத்தில் இன்னாரை தாக்கி இப்படி நீ பேசியாக வேண்டும்" என்று அவர் முன்னே நோட்டுக் கட்டுக்களை நீட்டி இடப்படும் கட்டளை அது..

இது இன்னும் அதிகமாகும்...

1) 1993 மும்பை குண்டுவெடிப்பு கொலையாளிகளின் மதத்தை விமர்சிக்காமல் மிக்சர் தின்றவர்...

2) 1998 கோவை குண்டுவெடிப்பு நடத்திய கொலையாளிகளின் மதத்தை விமர்சிக்க திராணி இல்லாதவர்...

3) 2001 நாடாளுமன்ற தாக்குதலுக்கு காரணமானவர்களின் மதத்தை விமர்சிக்க துப்பில்லாதவர்...

4) 2008 மும்பை சத்ரபதி ரயில் நிலையம் முதல் பல இடங்களில் நடந்த கொலைகளுக்கு காரணமானவர்களின் மதத்தை விமர்சிக்க வக்கில்லாதவர்...

5) அட இவ்வளவு ஏன்? "ஒரு தீவிரவாத இயக்கத்தை தீவிரவாத இயக்கம் ன்னு ஒன் விஸ்வரூபம் படத்துல சொல்லக் கூடாது...மீறினா ஒன் வீட்ல குண்டு போடுவோம்" ன்னு மிரட்டினவனோட மதத்த விமர்சிக்க தெம்பில்லாதவன்...

காந்தியின் கொலையாளியிடம் மட்டும் மதத்தை தேடுகின்றான் என்றால், அவன் சுயமாக இயங்குபவன் அல்ல, காசு கொடுத்து இயக்கப்படுபவன் என்பது வெட்ட வெளிச்சம்..

மாவோயிச தீவிரவாதிகள், ராஜீவை கொன்றவர்கள்- இவர்களிடமும் நம் தலைவர் மதத்தை தேட மாட்டார்...ஏனென்றால், நாட்டிற்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளதால் மதம் இந்த இடத்தில் முக்கியமில்லை...

ஸ்மிரிதி இரானியிடம் வெட்கமில்லாமல் "மாவோயிச தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள்" என்று கூறிய கயவன்தான் இவன்..

இவன் தானாகவே ஆடி அழிந்து விடுவான்...

அல்லது தங்களுக்கு இவனால் இனி எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்தவுடன் இவனுக்கு தூக்கி எரியும் எலும்பில் அவர்களே விஷம்  தடவித் தந்து விடுவார்கள்...

அது வரை தாராளமாக குரைக்கட்டும்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.