சிம்மம்
தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நிலைமைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகள் கிடைக்கும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். புது வேலைக் கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாகயிருப்பதால் அரைக்குறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கான வழி, வகை பிறக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாகயில்லாததால் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையும் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். போட்டிகள் குறையும். என்றாலும் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். வேலையாட்கள் முரண்டுப் பிடிப்பார்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைச்சுமையைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள் அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.
தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நிலைமைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகள் கிடைக்கும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். புது வேலைக் கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாகயிருப்பதால் அரைக்குறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கான வழி, வகை பிறக்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாகயில்லாததால் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையும் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். போட்டிகள் குறையும். என்றாலும் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். வேலையாட்கள் முரண்டுப் பிடிப்பார்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைச்சுமையைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள் அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.