Type Here to Get Search Results !

வாஸ்து தோஷம் இருந்தால் ? வீட்டில் மஹாலட்சுமி குடியிருப்பாளா ?

         


    வீட்டில் தோஷங்கள் உண்டாகாமல் இருக்க, தீயசக்தி – தீய ஆவிகள் வீட்டினுள் வராது இருக்கப் பெண்கள் அவசியம். ‘வெள்ளி அன்று விரதம் இருக்க வேண்டும். விரதம் பின்பற்றப்படும் இல்லத்தில் மஹாலட்சுமி குடியிருப்பாள் என்பது சாஸ்திர ரீதியான உண்மை.

               சித்திரை மாதம். வளர்பிறை. வெள்ளி அன்று அல்லது வைகாசி மாதம், வளர்பிறை, வெள்ளி அன்று, அதிகாலை 4.30 மணி அளவில் பெண்கள் எழ வேண்டும். வீடு, வாசல், முற்றம் நீர் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். ’ஸ்ரீமஹா கணபதி’ முன் நிவேதனப் பொருட்கள் படைக்க வேண்டும். பின் பக்தியுடன் ஸ்ரீகணபதி மூல மந்திரம்  ஜபம் செய்யலாம். (ஓம் கம் வம் ஸ்ரீமஹா கணபதியே ஸ்வாஹ) அல்லது விநாயகர் அகவல் பாராயணம் பண்ணலாம்.

அன்று அருகில் உள்ள ஸ்ரீவிநாயகர் ஆலயத்தில் அர்ச்சனை மற்றும் ஆராதானைகள் செய்யவும். அன்னதானம் அல்லது மிக எளிமை எனில் சுண்டல் வினியோகம் செய்வது மிகவும் நல்லது. அதுவும் இயலாதவர்கள் ஸ்ரீவிநாயகர் ஆலயத்தில் தீபம் தினம் ஏற்றும்படியாக நல்லெண்ணெய்  தானம் தர, நம் வேண்டுதல் நிறைவேறும். செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் ஸ்ரீவிநாயகர் ஆலயத்தை சுத்தம் செய்து, வண்ணக் கோலம் வரைந்து, தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் நடத்தலாம்.
                வீட்டில் விரதம் இருந்து வழிபாடுகள் நடத்தினாலும் சரி. ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தினாலும் சரி. அவரவர் வசதி வாய்ப்புக்கு ஏற்ப வழிபடலாம். வழிபாட்டில் பக்தியும், உருக்கமும் தான் மிகமிக அவசியம். பலர் விரதம் இருக்கிறேன், என்று பல நாட்கள் பட்டினி கிடந்து, தன் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கடன் வாங்கி கோயில் திருவிழாக்கள் போவதும், நடத்துவதும் பார்த்து இருக்கிறேன். வசதி, வாய்ப்பு இல்லையா? மனதால் தியானியுங்கள். முடிந்தவரை சேவை செய்யுங்கள். கண்டிப்பாக இறையருள் கிடைத்தே தீரும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.