யாராவது ஒருவர் தங்களுடைய வாழ்வில்
போதுமான பணம் இல்லாதிருக்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும், அவர்கள்
தங்களுடைய எண்ணங்கள் மூலம் பணம் அவர்களிடம் வந்நு சேர்வதைத தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்
என்பது தான் அக்காரணம். ஒவ்வொரு எதிர்மறையான எண்ணங்களும், உணர்வுகளும், பணம் உட்பட
அனைத்து சிறந்த விஷயங்களும் உஙக்ளிடம் வந்து சேர்வதைத் தடுத்துக கொண்டு இருக்கின்றன,
பிரபஞ்சம் உங்களிடமிருந்து அப்பணத்தைத் தள்ளி வைத்து இருக்கவில்லை. ஏனெனில் உங்களுக்குத்
தேவைப்படும் அனைத்து பணமும் தற்போது, இக்கணத்தில் பார்வைக்குப் புலப்படாத உலகில் இருந்து
கொண்டு தான் உள்ளது. பணப் பற்றாக்குறை எண்ணத்திலிருற்து தேவைக்கும் அதிகமான பணம் இருக்கிறது
என்ற எண்ணத்திற்கு நீங்கள் மாற வேண்டும். அப்படிச் செய்யும் போது தராசு முள் உங்கள்
பக்கமாகச் சாயத் துவங்கும்.
உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது
உங்களுக்குள் உண்டாகும் உணர்வு சக்திமிக்கது, அதனால் ஈர்ப்பு விதிப்படி, நீங்கள் அப்படிப்பட்ட
தேவை இருந்து கொண்டே இருக்கும் சூழலை உங்களை நோக்கித் தொடர்ந்து கவர்ந்து இழுத்துக்
கொண்டேயிருப்பீர்கள்.
பணத்தை குறித்து என்
அனுபவத்தில் நடந்தது, சென்ற மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் நான் செய்த முதலீடு ஒரு இலட்சம்
என்றால், அது இரண்டு இலட்சம் ஆனது.