ஒரு உயிர் மனித ஜென்மமாக பிறவி எடுப்பதற்கு முன்னால், ஒரு செல் உயிரினமாக பிறவி எடுத்த பின்பு, பல ஆயிரம் வருடங்களாக பல பல பிறவிகளை கடந்து மனிதனாக பிறவி எடுக்கிறது. அதனால் தான் மனிதனின் குணங்கள் மிருக குணங்களை கொண்டு கூடவே அறிவையும் கொண்டுள்ளது.
நிஜமாகவே வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வது ஆகும். மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழவேண்டுமென்றால் போதும் என்ற மனம் வேண்டும். பிற உயிர்களை நேசிக்கவேண்டும். பிறருக்கு உதவவேண்டும்.
சாகும்போது எதுவுமே கொண்டுசெல்ல முடியாது என்று உணரவேண்டும்
நம் உடலை விட்டு உயிர் பிரிந்து போனபின், சில காலங்கள் கழித்து நம் பக்கத்து பரம எதிரி வீட்டில் மகனாகவோ பேரனாகவோ பிறந்தால், நம் போன ஜென்மத்து சொந்த மகனையோ அல்லது கொஞ்சி விளையாடிய பேரனையோ நம் பரம எதிரியாகவோதான் பார்ப்போம். அதனால் பிறரை தன் உயிர் போல் நேசிக்கவேண்டும் .
நம் கல்வி முறையில் மாற்றம் தேவை.
சைவ உணவு மட்டுமே உண்ணவேண்டும்.
அசைவ உணவு உண்ணும் ஒருவர் பூரண சைவ உணவு மட்டுமே உண்ணத்தொடங்கினால் சுமார் இரண்டு மாதத்திலேயே அவருடைய கஷ்டங்கள் மாறுவதை அவரால் உணரமுடியும். இதனை நான் அனுபவபூர்ணமாக உணர்ந்து அதன்படி கடைபிடிக்கிறேன்.
நம் வாழ்க்கையை பற்றி எவ்வளவு சொன்னாலும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அப்போது புரிந்துகொள்ள என்ன வழி?.
வழி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆன்மீக யோகா கற்று அப்படி பயிற்சி எடுத்தால் நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன என்பதனை அறியலாம்.
ஒரு திடலில் சுமார் ஐம்பது வயதான இரண்டு மாமரங்கள் இருந்ததாம். அதில் ஒன்று இதுவரை பூ பூத்து காய் காய்க்காததால் அந்த மரம் அடர்த்தியான இலைகளோடு நல்ல நிழல் தரும்படி நின்றதாம். அதனால் அந்த நிழலில் நின்று யோக பயிற்சி பதினாலு நாட்கள் நடந்தது. பயிற்சி முடிந்த பதினாலாவது நாள் அந்த மரம் இலை தெரியாதவாறு வெறும் பூவாக பூத்து குலுங்கி நின்றதாம். ஓர் அறிவு பெற்ற மரத்துக்கே இப்படி என்றால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு எவ்வளவு பிரயோஜனம் கிடைக்கும். இது உண்மையில் நடந்ததாக யோக ஆசிரியர் கூறினார்.
இது உண்மையா என்று நானும் அறிய பூக்காத ஒரு மாமரத்தின் பக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வந்தேன் .அது உண்மை என்பதை கண்கூடாக உணர்ந்தேன். அதனால் தேவையில்லாமல் ஒரு செடி அல்லது ஒரு மரத்தின் இலையை கூட கிள்ளக்கூடாது. புல்,மரம்,செடி,கொடி,பூ போன்றவற்றை ரசிக்கலாம், இயற்கையை நினைத்து வியக்கலாம்.
GOOD
பதிலளிநீக்குஒரு உயிர் மனித ஜென்மமாக பிறவி எடுப்பதற்கு முன்னால், ஒரு செல் உயிரினமாக பிறவி எடுத்த பின்பு, பல ஆயிரம் வருடங்களாக பல பல பிறவிகளை கடந்து மனிதனாக பிறவி எடுக்கிறது. அதனால் தான் மனிதனின் குணங்கள் மிருக குணங்களை கொண்டு கூடவே அறிவையும் கொண்டுள்ளது.
பதிலளிநீக்கு