Type Here to Get Search Results !

வரலாற்றில் இன்று.... மே 29 இன்றைய தின நிகழ்வுகள்...!

  

மே 29 கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

363 - உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை.

1328 - நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1416 - கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது.

1453 - கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது.

பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.

1660 - இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.

1677 - வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

1780 - அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர்.

1790 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1798 - 300 முதல் 500 வரையான ஐக்கிய அயர்லாந்து கிளர்ச்சிவாதிகள் பிரித்தானிய இராணுவத்தினரால் அயர்லாந்தில் கொல்லப்பட்டனர்.

1848 - விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1864 - மெக்சிக்கோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தார்.

1867 - ஆத்திரிய-அங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.

1868 - செர்பியாவின் இளவரசர் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.

1869 - பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.

1886 - மருந்தியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.

1903 - செர்பியா மன்னர் முதலாம் அலெக்சாந்தர், அராசி திராகா இருவரும் பெல்கிறேட் நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.

1914 - புனித லாரன்சு வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,012 பேர் உயிரிழந்தனர்.

1919 - ஐன்சுடைனின் பொதுச் சார்புக் கோட்பாடு ஆர்த்தர் எடிங்டன் என்பவரால் சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

1931 - பெனிட்டோ முசோலினியைக் கொலை செய்ய முயன்றதாக அமெரிக்கரான மிச்செல் சிரு என்பவரை இத்தாலிய இராணுவம் சுட்டுக் கொன்று மரணதண்டனைக்குட்படுத்தியது.

1950 - வட அமெரிக்காவைச் சுற்றி வந்த முதலாவது கப்பல் புனித ராக் கனடா, ஹாலிஃபாக்ஸ் நகரை வந்தடைந்தது.

1953 - எட்மண்ட் இல்லரி, செர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.

1964 - அரபு நாடுகள் கூட்டமைப்பு பாலத்தீனப் பிரச்சினை குறித்து விவாதிக்க கிழக்கு எருசலேமில் கூடியது. இது பலத்தீன விடுதலை இயக்கத்தை அமைக்க இது வழி கோலியது.

1972 - டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று சப்பானியர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

1982 - இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1982 - போக்லாந்து போர்: பிரித்தானியப் படைகள் அர்கெந்தீனாவை கூஸ் கிறீன் சண்டையில் தோற்கடித்தது.

1985 - பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் அரங்கின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1988 - அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் தலைவர் கொர்பச்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு மாஸ்கோ வந்து சேர்ந்தார்.

1990 - போரிஸ் யெல்ட்சின் சோவியத் உருசியாவின் அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.

1999 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.

1999 - 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அரசுத்தலைவரை மக்கள் தெரிவு செய்தனர்.

2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

2008 - ஐசுலாந்தில் 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 30 பேர் காயமடைந்தனர்.

2012 - இத்தாலியின் வடக்கே 5.8-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 24 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1630 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685)

1872 - சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)

1874 - கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர் (இ. 1936)

1880 - ஆசுவால்டு ஸ்பெங்கிலர், செருமானிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1936)

1890 - மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)

1914 - டென்சிங் நோர்கே, நேப்பால்-இந்திய மலையேறி (இ. 1986)

1917 - ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)

1923 - தருமபுரம் ப. சுவாமிநாதன், தமிழிசைத் தேவாரப் பேரறிஞர் (இ. 2009)

1926 - அப்துலாயே வாடே, செனிகலின் 3வது அரசுத்தலைவர்

1929 - பீட்டர் ஹிக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-இசுக்கொட்டிய இயற்பியலாளர்

1937 - மானா மக்கீன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்

1942 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)

1957 - மோசன் மக்மால்பஃப், ஈரானியத் திரைப்பட இயக்குநர்

1964 - ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2020)

இன்றைய தின இறப்புகள்

1500 - பார்த்தலோமியோ டயஸ், போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451)

1829 - ஹம்பிரி டேவி, ஆங்கிலேய-சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1778)

1892 - பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (பி. 1817)

1911 - டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1836)

1958 - வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)

1979 - மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (பி. 1892)

1984 - மார்க்கண்டு சுவாமிகள், ஈழத்து சித்தர் (பி. 1899)

1987 - சரண் சிங், இந்தியாவின் 5வது பிரதமர் (பி. 1902)

2005 - ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவர் (பி. 1926)

2008 - டி. பி. முத்துலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

2009 - சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)

2013 - ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1953)

2018 - முக்தா சீனிவாசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள்

சனநாயக நாள் (நைஜீரியா)

ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.