Type Here to Get Search Results !

வரலாற்றில் இன்று.... மே 28 இன்றைய தின நிகழ்வுகள்...!

 


மே 28 கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1503 - இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.

1533 - கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார்.

1588 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.

1644 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர்.

1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.

1802 - குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர்.

1830 - அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

1905 - உருசிய-சப்பானியப் போர்: சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு சப்பானியர்களால் அழிக்கப்பட்டது.

1915 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து சூன் 5 இல் முடிவுக்கு வந்தது.

1918 - அசர்பைஜான் சனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன.

1926 - போர்த்துகலில் வன்முறையை அடக்க அங்கு தேசிய சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1937 - போல்க்ஸ்வேகன், செருமானிய தானுந்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் செருமனியிடம் சரணடைந்தது. பெல்ஜியம் சண்டை முடிவுக்கு வந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: நோர்வே, பிரான்சு, போலந்து, பிரித்தானியப் படைகள் நோர்வேயின் நார்விக் நகரைக் கைப்பற்றின.

1942 - இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஐட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1,800 பேரைக் கொன்று குவித்தனர்.

1948 - தென்னாப்பிரிக்காவின் பிரதமராக தானியேல் பிரான்சுவா மலான் தெரிவு செய்யப்பட்டார். இவர் பின்னர் இனவொதுக்கலை அமுல்படுத்தினார்.

1956 - பிரான்சுடன் இந்தியா கையொப்பமிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.

1958 - இலங்கை இனக் கலவரம், 1958: கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர். தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[1]

1974 - வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.

1975 - 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

1977 - அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர்.

1987 - மேற்கு செருமனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் என்பவர் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் 1988 ஆகத்து 13 இல் விடுவிக்கப்பட்டார்.

1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1995 - உருசியாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,989 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர்.

1998 - பாக்கித்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, சப்பான் மற்றும் சில நாடுகள் பாக்கித்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

1999 - இத்தாலி, மிலன் நகரில், லியொனார்டோ டா வின்சியின் புகழ் பெற்ற இரவு இராவுணவு என்ற புகழ்பெற்ற ஓவியம் 22 ஆண்டுகள் புனரமைப்பின் பின்னர் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.

2007 - கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.[2]

2008 - 240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

2010 - பாக்கித்தான், லாகூர் நகரில் இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஆராதனையின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

2010 - மேற்கு வங்கத்தில், ஞானேசுவரி விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

2011 - மால்ட்டாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு ஆதரவாக 53% மக்கள் வாக்களித்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1736 - வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப், ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுநர் (இ. 1804)

1807 - அகாசி லுயி, சுவிட்சர்லாந்து-அமெரிக்கத் தொல்லுயிரியலாளர், நிலவியலாளர் (இ. 1873)

1865 - மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (இ. 1961)

1883 - வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1966)

1895 - உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1976)

1908 - இயான் பிளெமிங், ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், ஜேம்சு பாண்டை உருவாக்கியவர் (இ. 1964)

1912 - உரூபி பேய்னி சுக்காட், ஆத்திரிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1981)

1914 - குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகத் தமிழறிஞர், இசை ஆய்வாளர் (இ. 1981)

1923 - என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (இ. 1996)

1923 - டி. எம். தியாகராஜன், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007)

1925 - பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (இ. 2012)

1930 - பிராங்க் டிரேக், அமெரிக்க வானியலாளர்

1946 - சச்சிதானந்தம், இந்தியக் கவிஞர்

1969 - ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (இ. 2016)

1986 - செத் ராலின்சு, அமெரிக்க மற்போர் வல்லுனர், நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1843 - நோவா வெப்ஸ்டர், அமெரிக்க சொற்களஞ்சியத் தொகுப்பாளர் (பி. 1758)

1884 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறித்தவ ஊழியர் (பி. 1822)

1912 - பவுல் எமில் புவபோதிரான், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1838)

1937 - ஆல்பிரெட் ஆட்லர், ஆத்திரிய-இசுக்காட்டிய மருத்துவர், உளவியலாளர் (பி. 1870)

1950 - பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (பி. 1892)

1969 - சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் (பி. 1934)

1973 - ஆ. பூவராகம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1899)

1998 - இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1916)

1999 - பி. விட்டலாச்சாரியா, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1920)

2001 - உலிமிரி இராமலிங்கசுவாமி, இந்திய மருத்துவ அறிஞர் (பி. 1921)

2010 - கேரி கோல்மன், அமெரிக்க நடிகர் (பி. 1968)

2012 - மனசை ப. கீரன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)

2014 - மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர் (பி. 1928)

2017 - அ. விநாயகமூர்த்தி, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)

இன்றைய தின சிறப்பு நாள்

மாதவிடாய் சுகாதார நாள்

குடியரசு நாள் (நேபாளம்)

குடியரசு நாள் (அசர்பைஜான், ஆர்மீனியா)

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.