Type Here to Get Search Results !

கொரோனாவை ஒழிக்க அனுமன் மந்திரம் பாராயணம்: பிரக்யா சிங் தாக்கூர்



கொரோனா வைரசை ஒழிக்க நாள்தோறும் 5 முறை அனுமன் மந்திரத்தை ஆக வரை சொன்னால் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று பிரக்யாசிங் தாக்கூர் டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்

டுவிட்டரில்அவர்பதிவிட்டு இருப்பதாவது: வரும் 5 ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.அதனை முன்னிட்டு வரும் 5ம் தேதி வரை அனுமன் மந்திரம்(அனுமன் சாலிசா) பாராயணம் செய்ய வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை பெறுவதற்கும் கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு ஆன்மீக முயற்சியை மேற்கொள்வோம். ஆக.,5-ம் தேதி விளக்குகளை ஏற்றி ராமருக்கு வீட்டில் ஆரத்தி எடுத்து இந்த சடங்கை முடிக்கவும், தீபாவளியை போல கொண்டாடுவோம்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள இந்துக்கள் ஒரே குரலில் அனுமன் மந்திரங்களை துதித்தால் அது நிச்சயம் பலன்கிடைக்கும். நாம் அனைவரும் கொரோனா வைரசில் இருந்து விடுபடுவோம் என பதிவிட்டுள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.