Type Here to Get Search Results !

இடிக்கப்பட்ட கோவில் மீண்டும் அதே இடத்தில் பிரமாண்டமாக உருவாகிறது ... ஒன்று சேர்ந்து சாதித்த இந்துக்கள்



தென்காசி மாவட்டத்தில், நாடார் சமூகம் முதன்மையாக சிறு வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. சம்பன்குளம் கிராமத்தில் உள்ள காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவிலில் தலைமுறைகளாக ஒன்றாக அவர்கள் தெய்வவழிபாடு நடத்தி வருகிறார்கள் மற்றும் அதை குல தெய்வமாக கருதுகிறார்கள். இந்த கோயில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டது மற்றும் ஆண்டுதோறும் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வந்தனர் இருப்பினும்,

இந்த குக்கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக , இங்குள்ள இஸ்லாமியர்களிடமிருந்து தொடர்ச்சியான இடையூறுகளால் இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களால் இந்துக்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வந்துள்ளது.

இந்த சூழலில்தான் யாரும் எதிர்பாராத விதமாக முஸ்லிம்கள் கொடுத்த புகாரில் எந்தவித விசாரணையும், இந்து மக்களிடம் ஆலோசனையும் இன்றி கோவிலை மாவட்ட நிர்வாகம் உடைத்தது, இந்த தகவல் காட்டு தீயாய் பரவியது பட்டா இடத்தில் இருக்கும் கோவிலை இடித்த மாவட்ட நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.

இந்து மகாசபை களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒன்று சேர்ந்து போராடியது, இப்போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டிய நிலையில், மீண்டும் அதே இடத்தில் கோவிலை கட்டிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் பணிந்தது, தற்போது மிக பெரிய உத்வேகத்தில் அதே இடத்தில் முன்பு இருந்ததை காட்டிலும் பிரமாண்டமாக மாடனுக்கு சன்னதி உருவாகி வருகிறது.

இந்துக்கள் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கி போராடியதன் விளைவாகத்தான் இந்த வெற்றி கிடைத்தது என்றும், தவறாக குற்றம் சுமத்திய இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கேட்டு கொண்டுள்ளனர், அதே நேரத்தில் இனி எங்கும் கோவில் இடிக்கப்பட்டால் நாங்களும் களத்திற்கு வருவோம் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்துக்களின் ஒற்றுமை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.