குறிப்பாக நாடி ஜோதிடத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. அகத்தியர் பெயரால் உலவி வரும் ஏராளமான சித்த மருத்துவ நூல்கள் அவரது வைத்திய புலமையைப் பறை சற்றும். அகத்தியர் சிறந்த ஜோதிட மஹரிஷியும் கூட.
நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பருவிரளும், பெண் என்றால் இடத்து கை பெருவிரலும் காட்டப்பட வேண்டும். ரேகைக்கு விதவிதமான நல்ல பெயர்களும் உண்டு நல்ல காரியம் எவ்வளவு, தீய காரியம் எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து ஜாதகரின் முன் ஜென்மமும் விளக்கப்படும். பின்னர் ஜாதகம் தெளிவாக சொல்லப்படும். பின்னர் பலன்களும் ஆயுள் குறித்த விவரங்களும் வரும். பரிகாரம் தேவையெனில் அவையும் கூட விளக்கப்படும்.
ஒரு ஜாதகரின் குண நலன்கள், அவரது வெற்றிகள், தோல்விகள், மனைவி மக்கள், பதவி, நோய்கள் என அனைத்தையும் விளக்கப்படும்.