வியாபார நிலையங்களின் முன் சிறிய நீருற்றுகளை அமைப்பது வியாபாரத்தை பெருக்கும் நிலையே. பெரிய அலுவலகங்களில், தொழிற்சாலைகளின் முன் பெரிய நீருற்றை வைக்கலாம். நீருற்றுக்களில் வண்ண விளக்குகளும் அமைத்தால் சிறப்பான பலனைத் தரும். அனைவரது கவனத்தையும் கவரும் சக்தி இதற்கு உண்டு என்பதால் தொழில் நிதி முலையில் வைக்கலாம். பஞ்சாலை, பெரிய தொழிற்சாலைகளின் முன் வர்ண விளக்குகளுடன் வைப்பதால் வியாபாரம் பெருகி லாபத்தை தரும். நீர் செல்வத்தை தரும் சக்தி படைத்தது.
சுற்றுப்புற சூழ்நிலையில் நீர் வீழ்ச்சிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள், நீருற்றுகள், மீன் தொட்டிகள் இருப்பது செல்வமும், உடல் நலமும், அமைதியும் தரும் என்று சொல்லப்படுகிறது. இவ்திமான இடங்களில் இயற்கைக் காற்று அதிகமாக வீசும் நிலையில் உடல் நிலத்தை தரும். இந்த இடங்களில் தண்ணீரில் ஏற்படும் அசைவால் ஓசையினால் மன அமைதி ஏற்படுகிறது. கடல் அலைகளின் ஓசை கவலையை போக்கும் சக்தி படைத்தது. மாலை வேளையில் கடற்கரையில் சிறிது நேரம் இருந்தாலே புத்துணர்வு பெற்றுவிடுவதைக் காணலாம்.
மெதுவாக ஓடும் நீர் செல்வத்தின் வரவையும், மக்களுடன் ஏற்படும் உறவையும் தெரிவிக்கும். இதனால் வீட்டின் ஓரத்தில் மெதுவாக ஓடும் நீரோட்டம் இருந்தால் பண வரவும் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் உறவும் ஏற்பட்டு அவர்களால் உதவியும் தக்க நேரத்தில் பெறலாம்.
தொழிற்சாலை, பஞ்சாலை, பெரிய பங்களா போன்ற இடங்களின் முன் நீச்சல் குளம், சிறிய ஏரி, சிறிய குளம் இவை தேக்கி வைக்கப்பட்ட செல்வத்தைக் குறிக்கும். வீட்டின் செல்வ நிலையை உயர்த்த சிறிய நீர்த்தொட்டியை வீட்டின் முன் கட்டி அதில் சுத்தமான நீரை தேக்கி வைக்கலாம். சிறிய நீருற்றை வீட்டின் முன் நிறுவினாலும் தொழிற்சாலை, அலுவலகங்களின் முன ஏற்படுத்தினாலும் பணம் வரும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும். இதில் அமைக்கும் தொட்டியில் தங்க மீன்களை விடலாம். தவளையின் உருவத்தையும் பொம்மையாக செய்து தொட்டியின் விளிம்பில் வைக்கலாம். தவளை நல்ல சகுனம் என்றே சொல்லப்பட்டுள்ளது.
ஆலைகளில். தொழிற்சாலைகளில் வேலைகள் விரைவாக நடக்காமல் தேக்க நலை ஏற்பட்டால் நீருற்றை அதன் முன் நிறுவினால் தேக்க நிலை நீங்னிவிடும். வேலையும் விறுவிறுப்பாக நடைபெறும்.
வீட்டிற்கு முன் அமைந்திருக்கும் நீருற்றால் ஏற்படும் அலைஓசை களைப்பைப் போக்-கும். மனதிற்கு அமைதியை தரும். மனதிற்கிசைந்த சுற்றுச் சூழலை ஏற்படுத்தும்.
இதனால் தான் அருவிகளின் முன் நின்று அதனால் ஏற்படும் ஓசையைக் கேட்டாலே மன அமைதி கிடைக்கிறது. மேலும் மன அழுத்தமுள்ளவர்களை தினம் அதில் குளிக்க வைக்கிறார்கள். பலருக்கு இவ்விதச் செயல்பாட்டால் மன அழுத்தம் குறைந்திருப்பதைக் காணலாம்.
குற்றாலம் சென்றால் இந்நிகழ்வை நேரில் காணலாம். நீருற்றின் வடிவிம் வட்டமாகவே இருக்கும் படி அமைக்க வேண்டும். அதன் உயரம் முதல் கதவின் கீழ்மட்ட உயரத்தின் அளவாக இருக்க வேண்டும்.
பெரிய உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள் இங்கு கட்டிடத்திற்கு முன் வைப்பதால் அங்கு வருபவர்களுக்கு மன அமைதியையும் தரும். அங்கு வசிப்பவர்களுக்கு உடல் நலமும், மகிழ்ச்சியையும் .மன அமைதியையும் தரும்,
நீருற்று எப்பொழுதும் செயல்படும் நிலையில் பழுதடையாமல் பார்த்துக் கள்வது அவசியமாகும். இல்லையெனில் பல இடையூறுகளை உண்டாக்கும். செல் நிலையில் குறைப்பாட்டையும், எதையும் செயல்பட இயலாத நிலையையும் ஏற்படுத்தும். இதனால் இதைப் பராமரிப்பதில் கவனம் மிக அவசியம் தேவை.