முழுமை குறித்த எண்ணங்களை எண்ணுங்கள், இசைவான
எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒர் உடலில் வியாதி தங்கியிருக்காது. நீங்கள்
முழுமையைப் பேணப்போவதால் நீங்கள் உங்களை நோக்கி அதைக் கவர வேண்டும். வியாதி, வறுமை
மற்றும் மகிழ்ச்சியின்மை உட்பட மனித குலத்தின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்
முழுமையற்ற எண்ணங்களே. எதிர்மறையான எண்ணங்களை எண்ணும்போது, நாம் நமக்கே உரித்தான
பாரம்பரியத்திலிருந்து நம்மை வெட்டிக் கொள்கிறோம், நான் எதிலும் முழுமையையே
பார்க்கிறேன். நான் முழுமையின் மொத்த வடிவம், என்று ஒருமித்த நோக்குடன் பிரகடனம்
செய்யுங்கள்.
நான்
என் உடலில் இருந்து விறைப்புத் தன்மையையும் வளைந்து கொடுக்காத தன்மையையும் வெளியேற்றிவிட்டேன்.
என் உடலை நான் எளிதில் வளையக்கூடிய ஒன்றாகவும், குழந்தையின் உடலைப் போலக்
கச்சிதமான ஒன்றாகவும் கற்பனை செய்து அதில் முழுக்கவனம் செலுத்தினேன். என் உடலில்
இருந்த விறைப்புத் தன்மையும் மூட்டு வலிகளும் மாயமாய் மறைந்துவிட்டன. இதை நான்
உண்மையிலேயே இரவோடு இரவாகச் செய்து முடித்தேன்.
வயதாதல்
குறித்த நம்பிக்கை நம் எல்லோருடைய மனத்திலும் இருக்கிறது. குறுகிய
காலத்திற்குள்ளாகவே நாம் புதிய உடலைக் கொண்டிருக்கிறோம் என்று அறிவியல்
விளக்குகிறது. வயதாதல் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட நம்மைச் சுருக்கி
கொள்ளும் எண்ணம். அத்தகைய எண்ணங்களை உங்கள் மனத்தில் இருந்து
அப்புறப்படுத்துங்கள். நீங்கள் எத்தனைப் பிறந்த நாட்களைக் கொண்டாடியிருநத்
போதிலும், உங்கள் உடல் ஓரிரு மாதங்கள் ஆன ஒன்றுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஏன் உங்களுடைய அடுத்த பிறந்த நாளை, முதலாவது பிறந்த நாளாகக் கொண்டாடக்
கூடாது? நீங்கள் வயதாதலை உங்களை நோக்கி கவர்ந்திழுக்க விரும்பாதவரை, அறுபது
மெழுகுவர்த்திகளைக் கொண்டு அலங்கரித்து உங்களது கேக்கை வெட்டாதீர்கள்.
துரதிர்ஷ்டவசமாக, மேற்கத்தியச் சமுதாயம் வயது குறித்து அதீத கவனம் செலுத்துகிறது.
ஆனால் உண்மையில் வயது என்ற ஒன்று கிடையாது.
முழுமையான
ஆரோக்கியமான நிலை, கச்சிதமான உடல், கச்சிதமான எடை, மாறாத இளமை ஆகியவற்றை நீங்கள் உங்கள் சிந்தனை மூலம்
அடையலாம். அதைத் தொடர்ச்சியான முழுமை குறித்த எண்ணங்களைச் சிந்தித்துக்
கொண்டேயிருப்பதன் மூலம் எட்டலாம்.