Type Here to Get Search Results !

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ¦ Tiruvannamalai Karthigai Deepam 2019

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. 

மகா தீபம் ஏற்றுவதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதன் பிறகு மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.  மகா தீபம் ஏற்றப்பட்ட போது கோவிலில் குவிந்தி பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று பக்தி கோ‌ஷம் விண்ணை முட்டியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.